ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, சிங்கப்பூர், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இரு மார்க்கத்திலும் தொடர்ந்து சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது.
திருச்சி, மஸ்கட் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமான சேவைக் குறித்த விரிவான தகவல்!
அந்த வகையில், கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து மஸ்கட்டிற்கு இரு மார்க்கத்திலும் தினசரி மற்றும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், இவ்வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு பயண கட்டண சலுகையை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, கோழிக்கோட்டில் இருந்து மஸ்கட்டிற்கு ரூபாய் 7,869 என்ற கட்டணத்தில் பயணிக்கலாம். அதேபோல், மஸ்கட்டில் இருந்து கோழிக்கோட்டிற்கு ஓமன் நாட்டு ரூபாய் மதிப்பில் OMR 49.2 பயணிக்கலாம். இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 10,255.34 ஆகும். விமான நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்பால், விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல் முறையாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ‘ஏர்பஸ் பெலுகா’ விமானம்!
எனினும், இந்த ஆஃபர் எத்தனை நாள் நீடிக்கும் என்பது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
