திருச்சி மற்றும் தோஹா இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). திருச்சியில் இருந்து தோஹாவிற்கு IX 675 என்ற விமானத்தையும், தோஹாவில் இருந்து திருச்சிக்கு IX 676 என்ற விமானத்தையும் விமான நிறுவனம் இயக்கி வருகிறது.
இந்த விமான சேவையை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரு மார்க்கத்திலும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்!
குறிப்பாக, செப்டம்பர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.