Corona Virus : சீனாவில் கொரோனா வைரஸ் மிக மோசமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் இருந்து வெளிநாடு செல்வோரால் அந்தந்த நாடுகளிலும் வைரஸ் தொற்று பரவி வருகிறது.
Corona Virus : பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக அதிகரிப்பு; 478 பேர் சீரியஸ்
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தை ஒன்று வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் கண்ணாடியால் சூழப்பட்ட தனியறையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறைக்குள் இருக்கும் குழந்தை அறைக்கு வெளியே இருக்கும் மருத்துவரை நோக்கி கை காட்டி தன்னை தூக்குமாறு சைகை செய்தது.
இதை பார்த்த அவர் குழந்தையின் நிலையை கண்டு கண்ணீர் விட்டு அழுதார்.
https://youtu.be/KH0Kd3MTlKw
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போர் மனதை கலங்க வைத்திருக்கிறது.