இந்தியர்களின் வாட்ஸ் ஆப் தகவல் திருடப்படுகிறதா..?

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்களை இஸ்ரேல் உளவு நிறுவனம் உளவு பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்நிலையில் இந்திய குடிமக்களின் தனிப்பட்ட ரகசியங்களை பாதுகாக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பிரபல பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்தநிலையில் கலிபோர்னியா பெடரல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவு நிறுவனமான NSO, 1,400 பேரின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அவர்களது வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

முக்கியமாக இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சில முக்கிய நபர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. பிரபல சமூக ஆர்வலர்கள் வாட்ஸ்ஆப் தகவல்களும் திருடப்பட்டுள்ளதாகவும், யார் யார் போன் எண்கள் கண்காணிக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட வில்லை எனவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி இந்தியா அரசு கூறுகையில், இந்திய மக்களின் உரிமை சட்டபூர்வமாக பாதுகாக்கப்படும், அதற்கு தேவையான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். குடிமக்களின் உரிமைகள் சட்டப்படி பாதுகாப்பதை அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.