மாணவிக்கு தொல்லை; சிங்கப்பூரில் பணிபுரிந்தவரை மாஸ்டர் பிளான் போட்டு கைது செய்த போலீஸ்..!

நாகப்பட்டினம்: 36 வயதான சுப்பிரமணியன் என்பவர் வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் பகுதியைச் சேர்ந்தவர்.

கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்துவந்த இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்றுவந்தாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பேட்மிண்டன்; முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர் வீரரை வீழ்த்தி தமிழக வீரர் வெற்றி..!

கடந்த ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற தருணத்தில், கடலூரைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான கல்லூரி மாணவி மீது ஆசை கொண்டுள்ளார்.

இவருக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவியும் 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவிக்கு தொல்லை

இதனை தொடர்ந்து, ஒருநாள் அவர் படிக்கும் கல்லூரிக்கு சென்று அவரை காரைக்கால் கடற்கரைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அப்போது சுப்பிரமணியன் அந்த மாணவியிடம், “நான் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன். நீதான் என் 2ஆவது மனைவி” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பின்னர் சிங்கப்பூர் சென்ற சுப்பிரமணியன், அங்கிருந்து வாட்ஸ்அப் மூலம் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார். அதன்பின்னர் விவகாரம் பெரிதாவதை உணர்ந்த மாணவி பெற்றோர்கள் மூலம் நாகை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா இனி சிங்கப்பூரிலும்…!

புகாரின் பேரில், வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா மற்றும் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இருவரும் வழக்குப்பதிவுசெய்து, சுப்பிரமணியனைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீஸ் மாஸ்டர் பிளான்

அவரை ஊருக்கு வரவழைத்து கைது செய்யலாம் என திட்டம் தீட்டிய போலீசார், அதற்காக அந்த மாணவிக்கும் சுப்பிரமணியனுக்கும் திருமணம் செய்துவைப்பதாக உறவினர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் இருக்கும் சுப்பிரமணியத்திடம் பேசவைத்தனர்.

இதை உண்மை என நம்பி இன்பத்தின் உச்சத்தை அடைந்த சுப்ரமணியன், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து இறங்கினார்.

கைது

அங்கு தயாராக இருந்த போலீசார் அவரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.