இந்திய பிரதமர் மோடி ஏமாற்றம்..! ஏன் தெரியுமா ??

Unfortunately, I could not see the Sun due to cloud cover but I did catch glimpses of the eclipse in Kozhikode and other parts on live stream, says PM Modi.

சூரிய கிரகணம் (Solar Eclipse 2019) : 30 வருடங்களுக்கு பிறகு நிகழ்ந்த அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை இந்தியா முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி சூரிய கிரகணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இன்று நிகழ்ந்த வளைய வடிவ சூரிய கிரகணத்தைக் காண நாடெங்கிலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர். தானும் சூரிய கிரகணத்தைக் காண மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனினும் மேகக் கூட்டங்கள் சூழ்ந்ததால் தன்னால் சூரிய கிரகணத்தை நேரிடியாக காண முடியவில்லை என்ற தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, கேரள மாநிலம் கோழிக்கோட்டிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் தென்பட்ட சூரிய கிரகணத்தை தொலைக்காட்சி நேரலைகள் மூலம் கண்டு ரசித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், நிபுணர்களுடன் விவாதித்து சூரிய கிரகணம் குறித்த தனது அறிவை வளர்த்துகொண்டதாகவும் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.