சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் தீவிர பரிசோதனை..!

seven-tier security at Chennai airport

பாபர் மசூதி இடிப்பு தினம் வருடந்தோறும் டிசம்பர் 6ல் கருப்பு நாளாக முஸ்லிம்களிடையே அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையயில், பாபர் மசூதி இடிக்கப்பட்டு 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக அயோத்தி நகரம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார், மத்திய தொழில் படை போலீசார் ஆகியவர்கள் 7 அடுக்கு வளையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தினுள் வரும் வாகனங்கள், பயணிகள் கொண்டு வரும் உடமைகள் என அனைத்தும் தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பில் இருந்து விமான நிலையத்திற்குள் பார்வையாளர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அந்த தடை தற்பொழுதும் நீடித்து வருகின்றன.