தமிழகத்தில் COVID-19 பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை வந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டில் தங்கும் உத்தரவு..!
இன்று (மார்ச் 24) புதிதாக மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 74 வயது முதியவர் (போரூர்), 52 வயது பெண் (புரசைவாக்கம்), 25 வயது பெண் (கீழ்கட்டளை) ஆகியோர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
#coronaupdate:Chennai reports 3 new cases for #COVID19. All 3 travelled abroad.74 Y M return from USA at #Stanley,52 Y F return from USA at #Stanley,25 Y F return from Swiss at #KMC,.They are residents of Porur, Purasaivakkam, Keelkattalai rsptvly.Pts in isolation & stable. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
அந்த 15 பேரில், 9 பேரின் விவரம் வெளியாகி உள்ளது. ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
முதல் நபர்
- 45 வயது காஞ்சிபுரத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 28-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் ஓமனில் இருந்து சென்னை வந்துள்ளார்.
- 7-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
இரண்டாம் நபர்
- 25 வயது உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 13-3-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளார்.
- 18-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
மூன்றாம் நபர்
- 21 வயது சென்னையை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 17-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் அயர்லாந்தில் இருந்து சென்னை வந்துள்ளார்.
- 20-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
நான்காம் நபர்
- 65 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் நியூசிலாந்து to சிங்கப்பூர் வழியாக சென்னை வந்துள்ளார்.
- 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஐந்தாம் நபர்
- 69 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்துள்ளார்.
- 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஆறாம் நபர்
- 75 வயது ஈரோட்டை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 11-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்துள்ளார்.
- 21-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஏழாம் நபர்
- 25 வயது கோயம்புத்தூர் சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 15-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- ஸ்பெயினில் இருந்து டெல்லி சென்று அங்கு இருந்து பெங்களூர், அங்கு இருந்து கோவை வந்தார்.
- 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
எட்டாம் நபர்
- 43 வயது திருநெல்வேலி சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்தார்.
- இவர் துபாயில் இருந்து மதுரை வந்துள்ளார்.
- 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
ஒன்பதாம் நபர்
- 64 வயது சென்னை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
- 20-2-2020 அன்று சென்னை விமான நிலையம் வந்துள்ளார்.
- அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வந்து அங்கு இருந்து சென்னை வந்தார்.
- 22-3-2020 அன்று கொரோனா வைரஸ் இவருக்கு உறுதி செய்யப்பட்டது.
தகவல் : தமிழக ஊடகங்கள்
இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை; பயணிகள் உறுதிமொழி ஏற்பு..!