தண்ணீர் வறட்சி – 5000 ஒட்டகங்களை கொன்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில், தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுகிறது. நாட்டின் வனப்பகுதிகளில், தண்ணீர் இல்லாமல் போனதால், அடிக்கடி காட்டுத்தீ உருவாகி வருகிறது.

வறட்சி மற்றும் கடும் காட்டுத்தீயினால் அதீத உஷ்ணங்களைத் தாங்க முடியாமல் ஒட்டகங்கள் பூர்வக்குடியினர் வசிக்கும் பகுதிகளுகு வரத்தொடங்கின. இவைகளின் வரத்தினால் நீராதாரம், ஏற்கெனவே பற்றாக்குறையில் உள்ள உணவுகள் ஆகியவற்றுக்கு ஆபத்து நேர்வதாக கருதப்பட்டது.

ரீட்வீட் செய்த ஃபாலோயர்களுக்கு ரூ.64.36 கோடி பரிசு – ஜப்பான் தொழிலதிபர் அதகளம்

தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்தது. ஐந்து நாட்களில் ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் ஆஸ்திரேலியா அரசு நியமித்தது.

அனங்கு யாங்குனியாஜராவில் சுமார் 2,300 பூர்வக்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 5,000 ஒட்டகங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கை ஞாயிறன்று முடிந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் பறந்த படி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு வன உயிரின ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான் – பதைபதைக்க வைக்கும் வீடியோ