இந்த வருடத்தின் துவக்கத்திலேயே மிகவும் முக்கியமான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. கே.சிவன், முதன்முறையாக, சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து, இந்த வருடத்தில் இஸ்ரோ மேற்கொள்ள இருக்கும் முக்கியமான ஆராய்ச்சிகள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டார்.
மேலும் படிக்க – ஊரக உள்ளாட்சி தேர்தல்: முதன்முறையாக களத்தில் முந்திய எதிர்க்கட்சி – ஒரு முழு ரிப்போர்ட்
மேலும் படிக்க – ஊரக உள்ளாட்சித் தேர்தல் – ஆன்லைனில் புள்ளி விவரத்துடன் முடிவுகளை பார்ப்பது எப்படி?
கடந்த ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்திய விமானப்படையில் இருந்து பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட நான்கு விமானிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் விமானிகளுக்கு யூரி காகரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிகள் வழங்கப்படும்.
இது மட்டுமின்றி, தமிழகத்தில், இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் உருவாக்குவதற்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் திட்டம் ஆரம்பமாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளார் அவர். குறைந்த அளவு எடை கொண்ட செயற்கை கோள்கள் SSLV இங்கிருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.