‘திருச்சி, கோலாலம்பூர் இடையேயான மலிண்டோ ஏர் நிறுவனத்தின் விமான சேவை’- டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

Photo: Trichy International Airport

திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது மலிண்டோ ஏர் நிறுவனம் (Malindo Air). இந்த வழித்தடத்தில் ‘மலிண்டோஏர் ஓடி 222’ (Malindo Air OD 222) என்ற விமானத்தை இயக்கி வருகிறது.

‘அக்டோபர் 30 முதல் திருச்சி, தோஹா இடையே கூடுதல் விமான சேவை’-ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

இந்த வழித்தடத்தில் ஜூலை மாதத்தில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களிலும், ஆகஸ்ட் மாதத்தில் தினசரி விமான சேவையை இரு மார்க்கத்திலும் வழங்க உள்ளது இந்நிறுவனம். இந்த திருச்சி, கோலாலம்பூர் வழித்தட விமான சேவைக்கான ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு!

பயண அட்டவணை, பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.malindoair.com/in/ என்ற மலிண்டோ ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.