திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது ஏர் ஏசியா நிறுவனம். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நாள்தோறும் இரண்டு விமான சேவைகளை வழங்கும் ஏர் ஏசியா நிறுவனம், செப்டம்பர் 2- ஆம் தேதி முதல் நாள்தோறும் இரு மார்க்கத்திலும் மூன்று விமான சேவைகளை வழங்கவுள்ளது.
திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்வதற்கு குறைந்த பட்ச பயணக் கட்டணமாக ரூபாய் 7,383 நிர்ணயித்துள்ளது. ஏர் ஏசியா நிறுவனம் அனைத்து வழித்தடத்திலும் மிகக் குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வருகிறது என்பது நினைவுக்கூறத்தக்கது.
திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே ஏர்பஸ் 320 என்ற விமானத்தை இயக்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற ஏர் ஏசியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.