ஏர் ஏசியா விமான நிறுவனம் (AirAsia), இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் சென்னை, திருச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு தொடர்ந்து விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் வழங்கி வருகிறது.
திருச்சி மற்றும் கோலாலம்பூர் இடையே தினசரி மற்றும் நேரடி விமான சேவையை இரு மார்க்கத்திலும் ஏர் ஏசியா நிறுவனம் வழங்கி வருகிறது. திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு விமான பயணக் கட்டணமாக ரூபாய் 8,783 ஆக நிர்ணயித்துள்ளது. இந்த வழித்தடத்தில் நாள்தோறும் இரண்டு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமான சேவைக்காக ஏர்பஸ் 320 என்ற விமானம் பயன்படுத்தப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை… விண்ணப்பிக்குமாறு அழைப்பு!
இந்த வழித்தட விமான பயண சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை, டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airasia.co.in/home என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.