மலின்டோ ஏர் நிறுவனம் (Malindo air) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி, கோலாலம்பூர் இடையே இரு மார்க்கத்திலும் ‘மலின்டோ ஏர்’ விமான சேவையை வழங்கி வருகிறது. இது நேரடி விமான சேவை ஆகும். வாரத்திற்கு நான்கு மட்டும் இவ்வழித்தடத்தில் விமான சேவை வழங்கப்படுகிறது. அதன்படி, திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்கள் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
“சென்னை, அபுதாபி இடையே நேரடி விமான சேவை”- ஏர் அரேபியா நிறுவனம் அறிவிப்பு!
திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு OD 224 என்ற விமானமும், கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு OD 223 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
“திருச்சி, கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவை”- இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.malindoair.com/in/என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.