ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி, துபாய் இடையே இரு மார்க்கத்திலும் கூடுதல் விமான சேவை வழங்கப்படும். அதன்படி, இவ்வழித்தடத்தில் வாரத்திற்கு மேலும் மூன்று வாராந்திர விமானங்கள் இயக்கப்படும். ஏற்கனவே, திருச்சி, துபாய் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து துபாய்க்கு IX 611 என்ற விமானமும், துபாயில் இருந்து திருச்சிக்கு IX 612 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.
“இந்தியாவில் இருந்து தாய்லாந்து, மலேசியாவிற்கு மீண்டும் விமான சேவை”- ஏர் ஏசியா அறிவிப்பு!
கூடுதல் விமான சேவையாக, திருச்சியில் இருந்து துபாய்க்கு IX 615 என்ற விமானம் வாரத்தில், திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். துபாயில் இருந்து திருச்சிக்கு IX 616 என்ற விமானம் வாரத்தில் செவ்வாய்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமைகளில் இயக்கப்படும். கூடுதல் விமான சேவையானது வரும் மே மாதம் 9- ஆம் தேதி முதல் தொடங்கும்.
திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘மலின்டோ ஏர்’ நிறுவனத்தின் விமான சேவை!
எனினும், கூடுதல் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பயண டிக்கெட் முன்பதிவு, பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.