திருச்சி, அபுதாபி இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express). இந்த வழித்தடத்தில் வாரத்தில் ஒருநாள் மட்டும் விமான சேவையை விமான நிறுவனம் வழங்கி வருகிறது. திருச்சி மற்றும் அபுதாபி இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் இருந்து அபுதாபிக்கு IX 639 என்ற விமானமும், அபுதாபியில் இருந்து திருச்சிக்கு IX 640 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தட விமான சேவைக்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான, கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.