சென்னை வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு – மத்திய அரசு

சென்னையிலிருந்து புறப்படும் பல சர்வதேச விமானங்களில் தமிழில் அறிவிப்பு இருப்பதாகவும், இந்திய விமான நிறுவனங்கள் தமிழில் அறிவிப்பதில்லை எனவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

இதனிடையே, தமிழகத்துக்கு வந்து செல்லும் விமானங்களில் அறிவிப்புகளை தமிழில் மேற்கொள்ள தீவிரமாக யோசித்து வருவதாக மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றம் வளாகம்; சிங்கப்பூர் உட்பட பல நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகள் பரிசீலினை..!

இதனைத்தொடர்ந்து, சென்னை வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், சென்னை வந்துசெல்லும் பயணிகள் விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜனுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கடிதம் எழுதியுள்ளார். அதில் உள்ளூர் மொழிகளில் வெளியிட விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சேதி தெரியுமா – பாகிஸ்தானிலும் தமிழர்கள்!