‘அக்டோபர் 30 முதல் திருச்சி, தோஹா இடையே கூடுதல் விமான சேவை’-ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு!

Photo: Air India Express Official Twitter Page

திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவையை வழங்கி வருகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express). குறிப்பாக, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு தினசரி விமான சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

திருச்சி, ஷார்ஜா இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

அந்த வகையில், திருச்சி மற்றும் தோஹா இடையே வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது. அதன்படி, திருச்சியில் இருந்து தோஹாவுக்கு IX 675 என்ற விமானமும், தோஹாவில் இருந்து திருச்சிக்கு IX 676 என்ற விமானமும் இயக்கப்பட்டு வருகிறது.

Photo: Air India Express Official Website

இந்த நிலையில், பயணிகளின் நலன் கருதி திருச்சி மற்றும் தோஹா வழித்தடத்தில் இரு மார்க்கத்திலும் கூடுதல் விமான சேவை வழங்கப்படும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், வரும் அக்டோபர் மாதம் 30- ஆம் தேதி முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமைகளுடன், ஞாயிற்றுக்கிழமைகளிலும் விமான சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ‘ஏர் ஏசியா’ விமான சேவை- ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இதற்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், வேகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.