ககன்யான் திட்டம்: விண்வெளிக்கு செல்லும் இந்திய பெண் ரோபோ வ்யோம் மித்ரா

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கான சோதனை முயற்சியாக விண்ணிற்கு அனுப்ப பெண் ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தி உள்ளார்.

இதன் பெயர் வ்யோம் மித்ரா ரோபோ. அச்சு அசலாக அழகான பெண்ணைப் போல இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்களை போலவே சிரிப்பது, பேசுவது, கேள்விகளுக்கு பதிலளிப்பது என வியக்க வைக்கிறது. விண்வெளியில் வீரர்கள் செய்பவனவற்றை அப்படியே செய்தும் காண்பிக்கிறது.

விமானம் தாமதமானால் நோ டென்ஷன் – சென்னை ஏர்போர்ட்டில் 5 சினிமா தியேட்டர்

வரும் டிசம்பர் மாதம் வ்யோம் மித்ராவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், வ்யோம் மித்ராவை இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு ஹாய் சொல்லி வரவேற்றது வயோம்மித்ரா

வ்யோம் மித்ராவுக்கு கால்கள் இல்லாதததால் அரை ஹுயுமனாய்டு ரோபோ என அதிகாரிகள் கூறுகின்றனர். வ்யோம் மித்ராவால் பக்கவாட்டிலும் முன்பகுதியிலும் மட்டுமே குனிய முடியும். சில பரிசோதனைகளை செய்யும் வ்யோம் மித்ரா, இஸ்ரோ உடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருக்கும்.

2022 -ஆம் ஆண்டு, ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு ஆட்களை அனுப்ப திட்டமிட்டுள்ள இஸ்ரோ, அதற்கு முன்னர் இரண்டு ஆளில்லா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்புகிறது. இந்த இரண்டு விண்கலங்களிலும் வ்யோம் மித்ராவை விண்வெளிக்கு அனுப்புகின்றனர். ககன்யான் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 விமானப்படை வீரர்கள் ரஷ்யாவிலும் இந்தியாவிலும் பயிற்சி மேற்கொள்வார்கள்.

இவர்களின் உடல்நிலையை கண்காணிக்க உள்ள மருத்துவர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்களுக்கான உடைகளும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு இஸ்ரோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்த உள்ள GSLV Mark 3 ராக்கெட்டும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனிடையே பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், “ககன்யான் திட்டம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் என்பதோடு நில்லாமல், நீண்டகால தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்புக்கான கட்டமைப்பினை உருவாக்கும். விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நமது நாட்டின் இலக்கை அடைய வழிவகுக்கும்” என்று அவர் கூறினார்.

சென்னை வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு – மத்திய அரசு

1984ம் ஆண்டு ரஷ்ய விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணம் செய்துள்ளார். ஆனால் இந்த முறை இந்திய விண்வெளி வீரர்கள் இந்தியாவில் இருந்து இந்திய விண்கலத்தில் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளதாகவும் சிவன் பெருமிதம் தெரிவித்தார். சந்திரயான் 3க்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், வேகமாக நடைபெற்று வருவதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.