இந்திய தபால் துறை சேவைகளை ஆதரிப்போம்..!

தமிழ்நாடு முழுவதும் ஜி.எஸ்.டிக்கு முன்பு பார்சல் கவர் அனுப்ப ரூ.25 தான் கூரியரில் கட்டணம் பெறப்பட்டது. ஆனால், தற்போதைய நிலவரப்படி ரூ.50 வரை வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வுக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு தான் காரணம் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது.

தற்போது, 25 ரூபாய்க்கு 18% ஜி.எஸ்.டி சேர்த்தாலும் ரூ.4.50 தான் சேர்த்து வாங்க வேண்டும். அதாவது ரூ.29.50 தான். அதே போல் துணி சேம்பிள் பார்சலுக்கு கிலோக்கு ரூ.80 என்று அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

இது போல் ஜி.எஸ்.டி மீது பழி போட்டு பல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுவதாக பொதுவான கருத்து இருந்து வருகிறது.

இந்திய அரசின் தபால் சேவை தற்பொழுது நாடு முழுவதும் துரித வேகத்தில் இயங்கி வருகிறது.

சேவை கட்டணம் ரூ.5 முதல் வசூலிக்கப்படுகிறது. அதுவே Speed post என்றால் ரூ.25 தான் கட்டணம், டெலிவரி அடுத்த வேளை நாட்களில் செய்துவிடுகிறார்கள். இந்திய அஞ்சல் துறையை பொறுத்தவரை பார்சல் கட்டணம் மிக மிக குறைவாக கிலோவுக்கு ரூ.41 தான் வசூல் செய்யப்படுகிறது. எடை அதிகரிக்க அதிகரிக்க கட்டணம் குறைவாக வசூல் செய்யப்படுகிறது.

ஆன் லைன் மூலம் தபால் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்றும் பார்க்க முடியும்.

தபால்கள் மற்றும் பார்சல்கள் மிக குறைந்த கட்டணத்தில் கூரியர் சர்வீஸ் இல்லாத குக்கிராமத்துக்கு கூட சரியாக சென்றடைகிறது.

இரயில் நிலைய தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.