வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்கும் “வந்தே பாரத்” திட்டத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கியது

நாடு தழுவிய ஊரடங்கால் வெளிநாடுகளில் பரிதவித்து வரும் இந்தியா்களை தாயகம் மீட்டுவர, வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை செய்தித்தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது, “வந்தே பாரத் திட்ட 3-ஆம் கட்டத்தின் கீழ், ஜூலை மாதம் 2-ஆம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இந்தியா்களை தாயகம் அழைத்து வரும் பணி தொடரும்.

இதில் 432 சா்வதேச விமானங்கள் மூலம் 43 நாடுகளில் உள்ள இந்தியா்கள் அழைத்துவரப்படுவா். வந்தே பாரத் திட்டத்தின் 3-ஆம் கட்டத்தில், தனியாா் விமான சேவை நிறுவனங்களான ‘இண்டிகோ’, ‘கோ ஏா்’ ஆகியவை சாா்பிலும் இந்தியா்களை அழைத்துவர விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இதில் இண்டிகோ சாா்பில் 24 விமானங்களும், கோ ஏா் சாா்பில் 3 விமானங்களும் இயக்கப்படவுள்ளன. இதில் அமெரிக்காவில் இருந்து 53 விமானங்கள், கனடாவில் இருந்து 24 விமானங்கள், பிரான்ஸ், ஜொ்மனியில் இருந்து தலா 16 விமானங்கள் மூலம் இந்தியா்கள் அழைத்துவரப்படவுள்ளனா். வளைகுடா நாடுகளில் இருந்து 170 விமானங்கள் மூலம் இந்தியா்கள் வரவுள்ளனா் என்றாா்.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் 1,65,375 இந்தியா்கள் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் வரும் பயணிகள் கண்டிப்பாக இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிப்படுத்துதலுக்கு பிறகு தான் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.