திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியச் சேர்ந்த குழந்தை சுர்ஜித் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். அன்று முதல் தமிழக அரசு, தன்னார்வலர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்புப்படையினர் என பல்வேறு தரப்பினர் குழந்தை மீட்கும் பணியில் ஈட்டுட்டுள்ளனர்.
இதற்கு, கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி, எழுந்து வா தங்கமே என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.
நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி.எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 #Diwali
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 27, 2019
குழந்தை கிணற்றுக்குள் 100 அடிக்கு கீழே சிக்கிக் கொண்டிருப்பதால், அதற்கு அருகிலேயே இன்னொரு குழி தோண்டி அதில் மூன்று தீயணைப்பு வீரர்கள் இறங்கி, பக்கவாட்டின் வழியே குழந்தையை மீட்க திட்டமிட்டுள்ளனர். குழந்தை சுர்ஜித் கிணற்றில் விழுந்து சுமார் 40 மணிநேரமாகிவிட்டது.
ஆனால், 27 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் அதிக அளவு இருந்ததால் குழந்தையை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.