Corona Virus : பலியானவர்களின் எண்ணிக்கை 361ஆக அதிகரிப்பு; 478 பேர் சீரியஸ்

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ்: சீனாவுக்கு விமான சேவையை நிறுத்திய இண்டிகோ

இந்நிலையில், சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 361ஆக திங்கள்கிழமை அதிகரித்துள்ளது. புதிய வகை கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் 16,600 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவர்களில் 478 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீனாவில் இருந்து விழுப்புரம், நீடாமங்கலம், திருவாடானை திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?