சென்னை, கோலாலம்பூர் இடையேயான ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமான சேவைக் குறித்து பார்ப்போம்!

Photo: SriLankan Airlines Official Twitter Page

இலங்கையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SriLankan Airlines), இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து கொழும்பு வழியாக சர்வதேச விமான சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் பெருநகரங்களான சென்னை, மதுரை, திருச்சி, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, லண்டன், தோஹா, குவைத், சிட்னி, மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களுக்கு சர்வதேச விமான சேவையை ஸ்ரீலங்கன் நிறுவனம் வழங்கி வருகிறது.

ஹைதராபாத், சிங்கப்பூர் இடையே தொடர்ந்து விமான சேவையை வழங்கி வரும் ‘ஸ்கூட்’ நிறுவனம்!

அந்த வகையில், சென்னையில் இருந்து கொழும்பு வழியாக கோலாலம்பூருக்கும், கோலாலம்பூரில் இருந்து கொழும்பு வழியாக சென்னைக்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து விமான சேவையை வழங்கி வருகிறது. இந்த விமான சேவை தினசரி விமான சேவை ஆகும்.

பயணிகள் விமான சேவையைத் தொடங்க ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு அனுமதி!

இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் பயண அட்டவணை உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.srilankan.com/en_uk/in என்ற இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.