சென்னை, துபாய் இடையேயான ஏர் இந்தியா விமான சேவை குறித்த முழுமையான தகவல்!

சென்னை மற்றும் துபாய் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் (Air India) வழங்கி வருகிறது. இந்த வழித்தடத்தில் மட்டும் நாள்தோறும் 10- க்கும் மேற்பட்ட விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கி வருகிறது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

‘திருச்சி, கோலாலம்பூர் இடையேயான ஏர் ஏசியா விமான சேவை’- ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

சென்னை மற்றும் துபாய் இடையே ஒரு நேரடி விமான சேவையையும், சென்னையில் இருந்து மும்பை வழியாக துபாய்க்கு மூன்று விமான சேவையையும் வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து டெல்லி வழியாக துபாய்க்கு ஐந்து விமான சேவையையும் வழங்கி வருகிறது. சென்னையில் இருந்து டெல்லி, மும்பை வழியாக துபாய்க்கு ஐந்து விமான சேவையையும் வழங்கி வருகிறது. மேலும், சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, இந்தூர் வழியாக துபாய்க்கு ஒரு விமான சேவையையும் வழங்கி வருகிறது. மேலே, குறிப்பிட்டுள்ள அனைத்து வழித்தடங்களிலும் இரு மார்க்கத்திலும் விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்தியாவின் எந்தெந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்குகிறது?- விரிவான தகவல்!

இந்த வழித்தட விமான சேவைகளுக்கான ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.airindia.in// என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.