இந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அமேசான் – 1 பில்லியன் டாலர் இலக்கு

Amazon CEO Jeff Bezos in India: உலகின் நம்பர் 1 பணக்காரரும், அமேசான் இணைய வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளருமான ஜெஃப் பெசோஸ் இந்தியாவுக்கு கடந்த ஜன.14ம் தேதி வருகை தந்திருந்தார்.

சீனாவை மிரட்டும் ‘கொரோனா’ வைரஸ் – வுஹான் மாகாணத்திற்கு செல்லும் திட்டம் இருந்தால் மறுபரிசீலனை பெஸ்ட்

பின்னர் டெல்லியில் அமேசான் நிறுவனம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ஜெஃப் பெசோஸ், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்வதில் அமேசான் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி மதிப்பை 10 பில்லியன் டாலர் வரையில் அமேசான் உயர்த்தும். 2023ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ஏற்கெனவே இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.

ஏற்றுமதியை மேம்படுத்தும் திட்டத்தில் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் டிஜிட்டல் மையங்கள் அமைக்கப்படும் எனவும், அதன் மூலம் மின்னணு வர்த்தகம், பொருட்களை டெலிவரி செய்வது, லாஜிஸ்டிக், டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட சேவைகள் எளிதாக்கப்படும் எனவும் அவர் கூறினார். இந்தியாவில் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை வளர்க்க 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்யப்படும் என்று ஜெஃப் பெசோஸ் உறுதியளித்தார்.

2013ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன்முதலில் காலடி எடுத்துவைத்த அமேசான், 2016 ஜூன் மாதத்துக்குள் 5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய உறுதியளித்தது. ஆனால் அதை விட அதிகமான அளவிலேயே முதலீடு செய்து இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சீனாவில் தனது சேவையை அமேசான் நிறுத்தியுள்ளதால் இந்தியாவில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதோடு, அதற்காக அதிகமான அளவில் முதலீடும் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கவலை கொள்ளும் தருணம் – ஒரே ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை