இந்தியா-சீனா சண்டை : 20 இந்திய வீரர்கள் வீர மரணம்! சமரசம் பேச அமெரிக்கா தயார்!

இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் நடந்து வரும் சண்டை குறித்து அமெரிக்கா முதல்முறையாக கருத்து தெரிவித்து உள்ளது. நேற்று முதல் நாள் இரவு நடந்த சண்டை குறித்து அமெரிக்கா மௌனம் கலைத்துள்ளது.

இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீனாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 43 பேர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள மோதலில் அமெரிக்கா தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. முக்கியமாக இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டுகிறார். இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நடக்கும் பிரச்னையை தீர்த்து வைப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

அதாவது எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்னையை சரி செய்ய தயாராக இருக்கிறோம். இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டால் அவர்களிடையே பேசி, சமாதானம் செய்து பேச தயாராக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் இந்த சமாதான பேச்சுக்கு இந்தியாவும் சீனாவும் மறுப்பு தெரிவித்துவிட்டன.

இந்நிலையில் இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் நடந்து வரும் சண்டை குறித்து அமெரிக்கா முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளது. நேற்று முதல் நாள் இரவு நடந்த சண்டை குறித்து அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மென்ட் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எல்லையில் நடக்கும் சண்டையை நாங்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

இந்தியா சீனா இடையிலான மோதலில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்த செய்தி கேட்டறிந்தோம். இதற்காக வருந்துகிறோம். அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சண்டையை எப்படியாவது அமைதியாக இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

இரண்டு நாடுகளும் இந்த பிரச்னையை தீர்க்க முடிவு செய்துள்ளது. விரைவில் அமைதியாக படைகளை வாபஸ் வாங்கி, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஜூன் 2ம் தேதிதான் போனில் பேசினார்கள். இந்தியா – சீனா மோதல் குறித்து இவர்கள் இருவரும் பேசினார்கள். அதில் இருந்து லடாக் எல்லை பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.